Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: குற்றவாளிகள் பிடிபடுவார்களா?

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (11:12 IST)
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபயிற்சியின்போது கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க சிபிசிஐடி கடந்த 5 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தும் இன்னும் இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை


 
 
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  சிபிசிஐடி விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் சிபிஐ விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த கொலை சம்பவத்தின் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ஆளுனர்களுக்கு 10 ஆண்டு சிறை: பாகிஸ்தானில் பரபரப்பு..!

Go Back Rahul.. உபியில் ராகுல் காந்திக்கு எதிராக திடீர் போராட்டம்..!

சென்னையின் பல பகுதிகளில் திடீர் மழை.. இன்று இரவு எங்கெல்லாம் மழை பெய்யும்?

’தலைவன் தலைவி’ போல் ஒரு உண்மை சம்பவம்: விவாகரத்து பெற்றும் ஒன்றாக வாழும் தம்பதிகள்!

இனி உலகமெங்கும் UPI பரிவர்த்தனை: 192 நாடுகளில் விரிவாக்கம் செய்ய திட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments