Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அறிக்கை வெளியிட்ட நிலையில் நடவடிக்கை! – மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

Webdunia
புதன், 12 மே 2021 (11:33 IST)
கொரோனா முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாமக ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் பல மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர்-பிற பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை; உயிரிழந்த 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.” என்று கூறியுள்ளார்.

மேலும் “மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments