Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் வலியுறுத்தியவைகளை நீதிமன்றம் ஆணையாக பிறப்பித்துள்ளது! – ராமதாஸ் ட்வீட்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (11:26 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தனது வலியுறுத்தல்களை நீதிமன்றம் ஆணையாக பிறப்பித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டோர், இறந்தோர் எண்ணிக்கை பதிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் கொரோனா இறப்புகள் மறைக்காமல் வெளியிடப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்காமல் வெளியிட வேண்டும்; அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இவை அனைத்தும் நான் வலியுறுத்தி வந்தவை என்பதில் மகிழ்ச்சி!” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments