Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதும் நான்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர்: ராம மோகனராவ்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (11:58 IST)
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். பின்னர் தலைமைச் செயலகத்திலும் நுழைந்து தலைமைச் செயலாளர் அலுவலக்த்தில் சோதனையிட்டனர்.
 

 

இந்த சோதனையின் போது துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ராம மோகனராவ் வீட்டில் பல ஆவணங்கள், பணம், நகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை வைத்து அவரை கைது செய்யும் சூழல் நிலவியது இந்நிலையில் அவர் உடல் நலம் சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தலைமைச் செயலகத்தில் சோதனை செய்யவேண்டுமானால் முதலில் என்னை பணி மாற்றம் செய்துவிட்டுதான் சோதனை செய்ய வேண்டும். அதனைவிட்டு தலைமைச் செயலகத்திற்குள் சி.ஆர்.பி.எப் நுழைந்தது தமிழகம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதைதான் காண்பிக்கிறது. இந்த சோதனையின் போது எங்கே சென்றது தமிழக அரசு?. இப்போதும் நான்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments