Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்காகவே அவரை டிஸ்மிஸ் செய்யலாம்: ராம மோகன ராவ் மீது பாய்ந்த நளினி சிதம்பரம்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (14:37 IST)
அரசு அதிகாரியான ராம மோகன ராவ் எப்படி அதிமுகவினருக்கு நன்றி கூறலாம். அவர் நாடகமாடுகிறார், இதற்காகவே அவரை டிஸ்மிஸ் செய்யலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் கூறியுள்ளார்.


 

 
ராம் மோகன் ராவ் வீடு, அவரின் மகன் வீடு மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம மோகன ராவ், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அதிமுகவினர், மம்தா பேனர்ஜி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். 
 
ராம மோகன ராவின் இத்தகைய பேட்டிக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் கூறியதாவது:-
 
அரசு ஊழியரான ராம மோகன ராவ் எப்படி அதிமுகவினருக்கு நன்றி கூறலாம். அவர் நாடகமாடுகிறார், யாரோ ஒருவரின் தூண்டுதலில்தான் பேட்டி அளித்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும்போது, நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், எப்படி ஆவேசமாக பேச முடியும்.
 
அதிமுக தொண்டர்களை தூண்டி விட்ட பேச்சுக்காகவே அவரை டிஸ்மிஸ் செய்யலாம், என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments