நினைவேந்தல் நிகழ்ச்சி ; மெரினாவில் குவிந்த மக்கள் - சென்னையில் பதட்டம்

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (18:13 IST)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பேரணியாக செல்லும் விவகாரம் 

 
இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு சில இயக்கங்கள் திட்டமிட்டன. ஆனால், மெரினாவில் போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், நீதிமன்ற உத்தரவை மீறி இதை நடத்தியே தீருவோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன. 
 
எனவே, மெரினா, சேப்பாக்கம் பகுதியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி மெரினாவில் நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், காவல்துறை அனுமதியை மீறி மெரினாவை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியில் செல்கின்றனர்.  இதில் மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை மெரினாவை நோக்கி செல்லாமல் தடுக்கும்  முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
 
பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை நினைவேந்தல் பேரணி சென்று கொண்டிருக்கிறது. பேரணி முடியும் நிலையில் போலீசார் அவர்களை போலீசார் கைது செய்வார்கள் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments