Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த்! – மருத்துவ காரணங்கள் என தகவல்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (15:45 IST)
சில தினங்களுக்கு முன்பு தனது பண்ணைக்கு வீட்டுக்கு சென்ற ரஜினி இ-பாஸ் எடுத்தாரா என்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் இன்று இ-பாஸ் எடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

நேற்று முன் தினம் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு ரஜினி தனது லம்போகினி காரை தானே ஓட்டி சென்றது ட்ரெண்டானது. இந்நிலையில் அவர் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் எடுத்தாரா என்ற கேள்வி எழுந்தது. ரஜினி இ-பாஸ் பெற்றாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினி. இதற்காக முறையாக அவர் இ-பாஸ் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸ் அவர் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments