Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடு! ரஜினி கட்சியில் குழப்பம்!? – பொறுப்பாளர்களுக்கு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி தொடங்க இருக்கும் கட்சியில் மன்ற நிர்வாகிகளின் மீதுள்ள புகார்களை கண்காணிக்க ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன், இப்போதே பிரச்சாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சி தொடங்கும் பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒரே சமயத்தில் ரஜினி கட்சியினர் மேற்கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடுகள் நடப்பதாக மன்ற நிர்வாகிகள் சிலரே புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ரஜினிகாந்த் தனது புதிய பொறுப்பாளர்களான அர்ஜூன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனிடம் நிர்வாகிகள் மீதான புகார்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அறிவுறுத்தியுள்ளாராம். அவர்கள் விசாரித்து நிலவரத்தை சொன்ன பிறகு மேற்கொண்டு ரஜினிகாந்த் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments