பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடு! ரஜினி கட்சியில் குழப்பம்!? – பொறுப்பாளர்களுக்கு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி தொடங்க இருக்கும் கட்சியில் மன்ற நிர்வாகிகளின் மீதுள்ள புகார்களை கண்காணிக்க ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன், இப்போதே பிரச்சாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சி தொடங்கும் பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒரே சமயத்தில் ரஜினி கட்சியினர் மேற்கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடுகள் நடப்பதாக மன்ற நிர்வாகிகள் சிலரே புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ரஜினிகாந்த் தனது புதிய பொறுப்பாளர்களான அர்ஜூன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனிடம் நிர்வாகிகள் மீதான புகார்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அறிவுறுத்தியுள்ளாராம். அவர்கள் விசாரித்து நிலவரத்தை சொன்ன பிறகு மேற்கொண்டு ரஜினிகாந்த் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments