Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் – வேலூர் தேர்தல் அப்டேட் !

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (09:35 IST)
வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேலை செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வேலூரில் பணப்பட்டுவாடாவால் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர், இந்நிலையில் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் களத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினி, மறைமுகமாக அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஆதரவளித்து வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த செய்தி அரசியல் களத்தில் பரபரப்புகளை உண்டாக்கிக்கியுள்ளது. ஏ சி சண்முகம், ரஜினியின் நண்பர் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி அதிமுக அமைச்சர் ஒருவரிடம் கேள்வி எழுப்பியபோது ‘ரஜினி வேலூர் வேட்பாளர் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவு அளித்துள்ளார் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments