Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம்

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (19:03 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்தக் கடிதத்தில், "நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
 
நீங்கள் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" என்று அந்தக் கடிதத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அதில், சமீப காலமாக நடந்தவை அனைத்தும் வருத்தத்துக்கு உரியது என்றும், ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், எல்லா பிரச்சனைகளும் இடர்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வந்து, மீண்டும் முறைப்படி நிர்வாகத்தில் ஈடுபடுவீர்கள் என்று ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி நம்பிக்கையூட்டியுள்ளார்.
 
முன்னதாக, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.
 
21 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு வெளியே வந்த அவருக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Show comments