அரசியல் கட்சியை இன்று பதிவு செய்கிறாரா ரஜினிகாந்த்?

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (07:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்த நிலையில் அவருடைய கட்சி பணிகளை அர்ஜுனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் கவனித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ரஜினி கட்சியினர் இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் கட்சியின் பெயரும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் மொத்தம் ஐந்து பெயர்களில் ஒன்றை ரஜினி தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் ரஜினியின் வழக்கறிஞர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் கட்சியைப் பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் கட்சிக் கொடியின் தயாராகி விட்டதாகவும் வெள்ளை நிறத்தில் நடுவில் வட்டமாக இடத்தில் ரஜினியின் புகைப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கட்சி பெயர் அறிவித்தவுடன் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் வார்டுகளிலும், அனைத்து தெருக்களிலும் கட்சி கொடியை நிறுவ ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

குழந்தைகள் சாகக் காரணமான கோல்ட்ரிப் ஆலை மூடல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம்: தமிழக அரசுக்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை..!

முதுகுவலி சரியாக தவளைகளை விழுங்கிய மூதாட்டி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments