Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க அரசியல் டிராமா - ரஜினியை விளாசும் ரசிகர்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:24 IST)
ரசிகர்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கி விட்டார் என நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி புலம்பல். 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் உறுதிபட கூறி விட்டார். இருப்பினும் அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் செய்தியை பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதனை அடுத்து இவ்வாறு வதந்தியை பரப்பிய ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகளை ரஜினி மக்கள் மன்ற அதிரடியாக நீக்கியுள்ளது. இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
ரஜினி என்னை மட்டும் ஏமாற்றவில்லை, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க அவர் காட்டிய தந்திரம் தான் அரசியல் கட்சி துவக்கம். கல்லா கட்டுவதில்தான் அவர் குறியாக இருந்தார். பொய்யாக மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் என கடுமையாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments