Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை அலுவலகத்தை மூட ரஜினி திடீர் முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (22:20 IST)
ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் விரைவில் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தனது கட்சி அறிவிப்பை  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை அலுவலகமாக சென்னையில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தின் ஒரு பகுதி செயல்பட்டு வருகிறார். இங்குதான் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். உறுப்பினர் சேர்க்கைகள், ஆலோசனைகள் உள்ளிட்ட வேலைகள் இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருவதாக வட மாநிலத்தில் படப்பிடிப்பில் உள்ள ரஜினியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் இதனால் அதிருப்தியான ரஜினிகாந்த், தலைமை  தலைமை அலுவலகத்தை இழுத்து மூட உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி சென்னை திரும்பியதும் பிரச்சனைகள் பேசி சரிசெய்த பின்னரே தலைமை அலுவலகம் திறக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்