Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த படபிடிப்பு ரத்து: பின்னணி என்ன??

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (12:26 IST)
இயக்குனர் சிவா - ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். 
 
இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு கீர்த்தி சுரேஷ், , சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 
 
முதற்கட்ட படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைப்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படபிடிப்பு வட இந்தியாவில் நடக்க இருந்தது. ஆனால், தற்போது நாடு முழுவதும் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
மேலும், ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments