Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில்டிங் ஸ்டிராங் பண்ணிட்டுதான் வருவேன் - ரசிகர்கள் முன்னிலையில் ரஜினி

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (12:23 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.   
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
 
இந்நிலையில், அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினிகாந்த் இன்று காலை சென்னை ராகவேந்திர திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
அரசியலுக்கு கட்டமைப்பு மிகவும் முக்கியம். குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமெனில் குடும்ப தலைவன் சரியாக இருக்க வேண்டும். தலைவனாக நான் சரியாக இருக்கிறேன். மாற்றவர்கள் சத்தம் போட்டல் போடட்டும். நான் பொறுமையாக இருப்போம். அனைத்து ரசிகர்களையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். அரசியலில் ஒவ்வொரு படியாக எடுத்து வைக்க வேண்டியது அவசியம். அடித்தளத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதால்தான் நாம் இந்த நிலையில்தான் இருக்கிறோம்.
 
தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருபவர்களைத்தான் ரஜினிகாந்த்  ‘சத்தம்’ எனக் குறிப்பிடுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாடு முன்கூட்டியே நடத்த முடிவு.. காவல்துறை அனுமதி..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்.. கைதாக வாய்ப்பா?

உங்க இஷ்டத்துக்கு வரி போடுறதுக்கு நாங்க ஆளாக முடியாது! - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

ராமதாஸ் தொலைபேசி ஹேக்? அன்புமணி காரணமா? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடக்கம் எப்போது? புதிய தகவல்!

அடுத்த கட்டுரையில்