விஜய் டீவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று நீயா? நானா?. கோபிநாத் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் சமூகங்களில் நடக்கும் பிரச்னைகள்,குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை விவாதிக்கும் நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கு வயது பேதமின்றி ரசிகர்கள் அதிகம் உண்டு.
வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பு நீயா? நானா? நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சந்தித்த வெற்றி தோல்விகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.