Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விவகாரம் குறித்து தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை: ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:57 IST)
நடிகர் ரஜினிகாந்த் நேற்று அளித்த பேட்டியின்போது ஒரு நிருபரிடம் 'எந்த 7 பேர்' என்ற கேட்ட கேள்வியை ஒருசில ஊடகங்களும் ஒருசில அரசியல்வாதிகளும் திரித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

அந்த நிருபர் தன்னுடைய கேள்வியை மொட்டையாக 7 பேர் விடுதலை என்று கேட்டதால் ரஜினி 'எந்த 7 பேர்' என்று கேட்டார். அவர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் அல்லது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் என்று விளக்கமாக கேட்டிருந்தால் ரஜினியிடம் இருந்து அந்த கேள்வி எழுந்திருக்காது.

இந்த நிலையில் ரஜினிக்கு தமிழக அரசியலே தெரியவில்லை, நாட்டு நடப்பே தெரியவில்லை என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பதிலளித்துள்ள ரஜினிகாந்த், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் தெளிவாக பதிலளித்திருப்பேன். 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments