Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 31ல் அறிவிப்பு, ஜனவரியில் கட்சி துவக்கம்: ரஜினிகாந்த் அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (12:29 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதன்படி சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தனது அரசியல் கட்சி தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார் 
 
டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் ஜனவரியில் கட்சி துவக்கம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியிருந்தார் என்பதும், சரியாக மூன்று வருடங்கள் கழித்து அவர் தனது அரசியல் கட்சியை அறிவிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பெயர் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அற்புதம் அதிசயம் நிகழும்; இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

அடுத்த கட்டுரையில்
Show comments