Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் மகள் பற்றி ரஜினி கூறியதை கேட்டு அழுதுவிட்டேன் : சிந்துவின் தாயார்

சிந்து பற்றி ரஜினி கூறியதை கேட்டு அழுதுவிட்டேன்

என் மகள் பற்றி ரஜினி கூறியதை கேட்டு அழுதுவிட்டேன் : சிந்துவின் தாயார்
, ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (11:55 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிந்து, மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 


 

 
அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், சிந்துவின் வெற்றியை பற்றியும், அவருக்கு கிடைத்த பாராட்டுகளை பற்றியும் அவரது தாய் பி.விஜயா செய்தியாளர்களிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
 
இறுதி ஆட்டம் முடிந்ததும், என் மகள் சிந்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவரது பேச்சில் தங்கம் வெல்ல முடியாத ஏமாற்றம் தெரிந்தது.  கவலைப்படாதே, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். இதுவே பெரிய வெற்றி. நீ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்று எங்களை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமைபட வைத்துவிட்டாய் என்று கூறினேன். அதன்பின்பே, அவர் சகஜ நிலைக்கு திரும்பினார்.
 
நாளை அவர் வீட்டிற்கு வந்ததும், அவருக்கு பிடித்த மைசூர் பாக்கு மற்றும் பிரியாணி ஆகியவற்றை செய்து கொடுப்பேன். நான் சென்னையில் 18 ஆண்டுகள் இருந்தேன். நன்றாக தமிழ் பேசுவேன். சிந்து தமிழ் புரிந்து கொள்வார். ஒரு சில வார்த்தைகள் மட்டும் தமிழில் பேசுவார்.
 
நடிகர் ரஜினிகாந்த் சிந்துவை பாராட்டியதோடு, நான் உங்கள் ரசிகனாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார். அவர் மிகப் பெரிய நடிகர். கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருப்பவர். அவர் இப்படி கூறியதை அறிந்ததும்,மகிழ்ச்சியில் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அதிர்ச்சி தகவல்’ - தேர்தல் செலவுக்காக வீடு புகுந்து கொள்ளையடித்த தே.மு.தி.க கவுன்சிலர் கணவன்