Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி யாரோ சொல்வதை பேசுகிறார் – தேமுதிக வில் இருந்து எதிர்ப்பு!

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2020 (14:06 IST)
ரஜினி யாரோ சொல்லும் கருத்துகளை பேசுவதாகவும் அதனால் குழப்பம் விளைவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் ரஜினிகாந்த் அரசியலில் யாரோ சொல்வதை பேசிக்கொண்டு இருக்கிறார் என சொல்லியுள்ளார்.

அந்த நேர்காணலில் ‘ரஜினி சார் மீது நாங்கள் மிக மிக மரியாதை வைத்திருக்கிறோம். ஏனென்றால் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் அவர். அவருடன் கூட்டணி வைப்போமே என்பதற்கு இப்போது எந்த பதிலும் இல்லை. இப்போது அவர் வெறும் நடிகர் மட்டுமே. அரசியல்வாதியாக ரஜினி எப்படி இருப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அவர் இப்போது யாரோ சொல்வதை சொல்கிறார். அதில் ஏதேனும் கேள்வி கேட்டால் விளக்கமளிக்க மறுக்கிறார். ஆனால் அதைப் பற்றி பலரும் பேசி குழப்பத்தைதான் உண்டாக்கிறார்கள். அதனால் தீர்வு கிடைக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments