Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள்

ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள்

கே.என்.வடிவேல்
வியாழன், 23 ஜூன் 2016 (12:32 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விவசாயிகள் கெடுவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காவிரி நதிநீர் பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. அப்போது, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடிகர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
 
பின்பு, கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார். ஆனால், அவர் கூறி, 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை ரஜினி அந்த நிதியைத் தரவில்லை.
 
எனவே, அடுத்த ஒரு மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாயை ரஜினி தரவேண்டும். இல்லை எனில், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ரஜினி நடித்த காபலி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், விவசாயிகள் போரட்டம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments