ரஜினி, அஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு : விஜய் குறித்து தெரியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:23 IST)
சென்னை, பள்ளிக்கரணையில், நேற்று, அதிமுக கட்சியினர் சார்பில் ,சாலையில் வைத்திருந்த பேனர் ஒன்று விழுந்ததால் இளம்பெண் சுபஸ்ரீ, சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும் இனிமேல் பேனர் கலாச்சாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அதிமுக நிர்வாகியின் இல்லப் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சென்னை, பள்ளிக்கரணையில் பேனர், விழுந்ததால் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மரணம் வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

மேலும், நடிகர்கள், ரஜினி மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவளிப்போம். ஆனால், நடிகர் விஜய் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

ஏற்கனவே,கடந்த வருடம் ,விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான சர்கார் படம் அதிமுக அரசினை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகப் பல்வேறு விமர்சங்கள் எழுந்தது  குறிப்பிடத்தக்கது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments