Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, அஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு : விஜய் குறித்து தெரியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:23 IST)
சென்னை, பள்ளிக்கரணையில், நேற்று, அதிமுக கட்சியினர் சார்பில் ,சாலையில் வைத்திருந்த பேனர் ஒன்று விழுந்ததால் இளம்பெண் சுபஸ்ரீ, சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும் இனிமேல் பேனர் கலாச்சாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அதிமுக நிர்வாகியின் இல்லப் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சென்னை, பள்ளிக்கரணையில் பேனர், விழுந்ததால் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மரணம் வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

மேலும், நடிகர்கள், ரஜினி மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவளிப்போம். ஆனால், நடிகர் விஜய் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

ஏற்கனவே,கடந்த வருடம் ,விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான சர்கார் படம் அதிமுக அரசினை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகப் பல்வேறு விமர்சங்கள் எழுந்தது  குறிப்பிடத்தக்கது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments