Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகவேந்திரா மண்டபத்தை மருத்துவமனையாக்க முன்வந்த ரஜினிகாந்த்!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (17:18 IST)
கொரோனா சிகிச்சைப் பெற தனது கல்யாண மண்டபத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 738 ஆக உள்ளது. இதுவரை இந்த வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வரும் நாட்களில் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.
 
இதையடுத்து கமல் தனது வீட்டையும், விஜயகாந்த் தனது கட்சி அலுவலகம் மற்றும் கல்லூரியையும், திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தையும் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டிருந்ததாம். 
 
எனவே, அரசு அதிகாரிகள் வந்து இடத்தை பார்வையிட்டு சென்றதாகவும், தற்போது இதற்கு தேவை இல்லை, தேவை எனில் அரசு இதை பரிசீலுக்கும் என கூறி விட்டு சென்றனராம். இதற்கு முன்னர் சென்னையில் வெள்ளம் வந்த போது ரஜினி தனது மண்டபத்தில் மக்களை தங்கவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு..! சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..!!

இயந்திரத்தில் கோளாறு.? தர்ணா போராட்டம்..! நா.த.க வேட்பாளர் கைது..!

530 ஓட்டுகள் காணவில்லை..! தேர்தல் அதிகாரியிடம் புகார்..! எங்கு தெரியுமா..?

என்னது Voter List-ல பேர் இல்லையா..? ஓட்டும் இல்லையா..! நடிகர் சூரி வேதனை..!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு மந்தம்..! 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments