Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ஆவினில் முறைகேடு; ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா? – லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (09:25 IST)
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் ஆவின் முறைகேட்டில் ஈடுபட்டாரா என விசாரணை நடந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.

இந்நிலையில் மதுரை ஆவினிலிருந்து திருப்பதிக்கு அனுப்பபட்ட நெய்யில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மோசடியில் ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments