Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து விடுதலை ஆனார் ராஜேந்திர பாலாஜி!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (09:37 IST)
ராஜேந்திர பாலாஜி இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை பணமோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில் தனிப்படை அமைத்து தேடிய போலீஸார் கர்நாடகாவில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர்.

இதனிடையே முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திரபாலாஜி தரப்பில் தொடரப்பட்ட முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில் தற்போது அவருக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை 7.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆகியுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments