Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப்பாணி குழந்தை கட்சியை கருவிலேயே அழிக்க வேண்டும்: கமலை வம்பிழுத்த அமைச்சர்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (15:15 IST)
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் மக்கள் நீது மய்யம் கட்சியை கருவிலேயே அழிக்க வேண்டும் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது அவர் பின்வருமாறு பேசினார், கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அதை வளரவிடுவது தமிழக மக்களுக்கே ஆபத்தாக போய் முடியும். 
 
கமல் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். எம்ஜிஆர் மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர். கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். 
தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால் அதிமுகவும், திமுகவும்தான் நிற்கும். மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும். அதிமுகவுக்கு எதிரி திமுகதான் என பேசியுள்ளார். 
 
கமலை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசியுள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments