Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியில் தண்ணீர் வர ராஜராஜ சோழன் சிலை காரணமா?

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (19:00 IST)
காவிரியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 85 ஆண்டுகால மேட்டூர் அணை வரலாற்றில் 39வது முறையாக தனது முழு கொள்ளளவை அடைந்துள்ளது. இன்று இந்த அணையில் இருந்து வினாடிக்கு 50ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைமடைக்கும் இந்த தண்ணீர் செல்லும் என்பதே விவசாயிகளின் கணிப்பாக உள்ளது.
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் குஜராத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலையை சிலை மீட்புத்துறை அதிகாரியான பொன்.மாணிக்கவேல் மீட்டு தஞ்சை கொண்டு வந்தார். ராஜராஜசோழன் சிலை தஞ்சைக்கு வந்தபின்னரே தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டதாகவும், அந்த சிலையில் வருகையால்தான் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இனிமேல் தஞ்சை உள்பட தமிழக விவசாயிகளுக்கு துன்பம் என்பதே இருக்காது என்றும், ராஜராஜ சோழனின் காலத்தில் எப்படி நாடு செழிப்பாக இருந்ததோ, அதேபோல் அவருடைய சிலை வந்த நேரம் இனிமேல் தமிழகத்திற்கு செழிப்புதான் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments