Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகத்தில் மழை தொடரும்- வானிலை மையம்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (14:36 IST)
ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாநில பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்குத் திசை, மேற்குத் திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூறிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments