ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகத்தில் மழை தொடரும்- வானிலை மையம்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (14:36 IST)
ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாநில பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்குத் திசை, மேற்குத் திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூறிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments