இன்று காலை 10 மணிக்குள் எத்தனை மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

Siva
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (07:30 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருக்கும் நிலையில், நாளையும் மறுநாளும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments