Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களுக்கும் மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (14:59 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. தற்போது புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை இந்த மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக டிசம்பர் 9ம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments