Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலைய ரன்வேயில் மழைநீர்: விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக தகவல்..!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:43 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதை அடுத்து சாலைகளை நீர் தேங்கியுள்ளது என்பதும் இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்,
 
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் ரன்வேயில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னைக்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 கன மழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர் உள்பட 10 நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டம் இட்டு இருந்தன.  இதனை அடுத்து அந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
 
அதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், துபாய், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments