Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14ம் தேதி வரை மழைவாய்ப்பு! இன்று 6 மாவட்டங்களில் கனமழை? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:36 IST)

தமிழகத்தின் பல பகுதிகளில் வருகிற 14ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை, இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிறது 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

11 மற்றும் 12ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments