Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2015 (11:03 IST)
சென்னையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில், நேற்று இரவு 11 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

காற்றும் பலமாக வீசியது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. 
 
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொட்டிய இந்த மழை அதிகபட்சமாக, சென்னை விமான நிலையத்தில் 56.4 மி.மீட்டராகப் பதிவாகியுள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், "வெப்பச் சலனம் நீடித்து வருவதால் இரவில் மழை பெய்து வருகிறது என்றும், இதனால், இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments