Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
, திங்கள், 30 நவம்பர் 2015 (08:26 IST)
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல், தஞ்சாவூர், தூத்துக்குடி, அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு  மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலை கழகம், மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல், தமிழகத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளதுடன் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil