Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
, சனி, 26 ஜூலை 2014 (19:41 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை மாநகரில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வால்பாறை, அப்பர்வானி, தேவானா அவலாஞ்சியில் 3 செ.மீ மழை பெய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil