Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கியது ஊட்டி ரயில் சேவை

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2015 (13:36 IST)
மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.


 

 
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
 
இந்த மண்சரிவு காரணமாக மலை ஊட்டி ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் கடந்த 2 நாட்களாக ரயில் இயக்கப்படவில்லை.
 
இந்நிலையில், அங்கு நடை பெற்று வந்த சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன. ரயில் பாதை சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் வழக்கம் போல் ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டது.
 
இதனால் ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அயடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments