Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
சனி, 24 பிப்ரவரி 2024 (11:32 IST)
தமிழகத்தில் மழை காலம் மற்றும் குளிர்கால முடிவடைந்து கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று இரண்டு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இனி அவ்வப்போது கோடை மழை மட்டுமே இருக்கும் என்றும் நாளடைவில் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு .. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. ஜாமின் மனு இன்று தாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments