அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (07:51 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பத்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று அறிவித்துள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

சிவனும் முருகனும் இந்து கடவுளா?!. யாரை ஏமாத்துறீங்க?... பொங்கிய சீமான்!...

அமித்ஷாவும், மோடியும் வந்தாதான் திமுக ஜெயிக்கும்!.. ஆர்.எஸ்.பாரதி ராக்ஸ்!...

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments