Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு....மக்கள் மகிழ்ச்சி!!!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (17:55 IST)
கோடை கால தொடங்கவுள்ளதால் தமிழகத்தில்  வெய்யில் கொளுத்தித் தள்ளுகிறது. பெரும்பாலும் மதியம் வர வேண்டிய வெயிலோ காலையிலே வந்து விடுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று நிலவிய வெப்பச் சலனத்தால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
இன்று கோவையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது,சென்னையில் வானம் ஓரளவும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்ட வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரியாகவும்  இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments