Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் நல்ல மழை.. சில்லென்று மாறிய சென்னை..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:12 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ததால் சென்னை நகரமே சில் என்று மாறியது என்பதும், இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, புளியந்தோப்பு, எழும்பூர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு மிதமான மழை பெய்தது. 
 
நேற்று பகல் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென இரவில் மழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்வதால் சென்னையில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என  கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments