Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்ந்தது சென்னை.. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (16:42 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் போல் வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திடீர் மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் குளிர்ச்சியான தட்பவெப்பம் நிலவுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது. சென்னை ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் போன்ற பகுதிகள் பலத்த மழை பெய்து வருகிறது.  
 
அதேபோல் சென்னை எழும்பூர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.  சென்னை மழை காரணமாக பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக கடும் வெயில் காரணமாக புழுக்கத்தில் இருந்த சென்னை மக்களுக்கு இந்த மழை பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் சென்னை எழும்பூர் அண்ணாசாலை தேனாம்பேட்டை புரசைவாக்கம் திருவல்லிக்கேணி பகுதிகளில்  மழை பெய்ததன் காரணமாக வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து கொண்டு சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments