Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (08:20 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் இனி மழை காலம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16  மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தெரிவித்துள்ளது.

 எனவே மேற்கண்ட 16 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் பரிதாப பலி.. குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் சோகம்..!

கொள்கை தலைவர்களின் சிலை திறப்பு.. மலர் தூவி மரியாதை செய்த விஜய்..!

ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கனுக்குள் கத்தி.. அதிர்ச்சி அடைந்த இளம்பெண்..!

சபரிமலை உள்பட 18 கோவில்களில் ரோப் கார்' திட்டம்: மத்திய அரசு முடிவு

விஜய் 'Invisible' ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது, எப்போது Visible ஆவார்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments