Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரம்பூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

பெரம்பூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
, வியாழன், 26 நவம்பர் 2015 (15:00 IST)
பெரம்பூரில் மழை நீரை அகற்றக்கோரி பெண்கள் உள்ளிடட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

 
பெரம்பூர் ஏகாங்கிபுரம் பகுதியில் மழை நீர் தெருக்களில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுற்த சிரமத்திற்க உள்ளாகி வருகின்றனர். இந்த நீருடன் கழிவு நீரும் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
 
அத்துடன், குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
 
இதனால் கோபமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்டடோர் தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்ற கோரி பெரம்பூர் சாலைய மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி காவல்துறையினர் போரட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil