Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (07:29 IST)
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்குள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
 
சென்னை
 
செங்கல்பட்டு
 
காஞ்சிபுரம்
 
திருவள்ளூர்
 
நீலகிரி
 
கோவை
 
கிருஷ்ணகிரி
 
தருமபுரி
 
திருவண்ணாமலை
 
வேலூர்
 
ராணிப்பேட்டை
 
திருப்பத்தூர்
 
தென்காசி
 
இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மழைக்காலங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இடி மற்றும் மின்னலின்போது பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments