தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (07:29 IST)
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்குள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
 
சென்னை
 
செங்கல்பட்டு
 
காஞ்சிபுரம்
 
திருவள்ளூர்
 
நீலகிரி
 
கோவை
 
கிருஷ்ணகிரி
 
தருமபுரி
 
திருவண்ணாமலை
 
வேலூர்
 
ராணிப்பேட்டை
 
திருப்பத்தூர்
 
தென்காசி
 
இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மழைக்காலங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இடி மற்றும் மின்னலின்போது பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments