Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2015 (08:11 IST)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்புமையம் தெரிவித்துள்ளது.


 


 
தென் கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.
 
இதன் வேகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே, கனமழை பெய்வதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
 
இதனால், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.
 
கடலோர மாவட்டங்களில் கனமழையோ அல்லது மிக கனமழையோ பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதேபோல, தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments