Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (09:00 IST)
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் இலங்கையில் கரையை கடந்த நிலையில் தமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்டா பாசன பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தென்காசி, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வரை மழைப்பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

Edit by prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments