Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
புதன், 24 ஜூலை 2024 (16:29 IST)
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழக முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்றைய சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. நீலகிரி, கோவை, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பூர், தேனி , திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி பிரம்மோற்சவ விழா: சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யும் தமிழக போக்குவரத்து துறை..!

ராணுவ அதிகாரிகளை தாக்கி, பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! சுற்றுலா சென்றபோது நடந்த விபரீதம்..!

வளையல் சேலை அணியுங்கள் என கூறிய எம்.எல்.ஏ.. செருப்பை காண்பித்து பதிலடி..!

எடப்பாடி பழனிசாமி உடன் மைத்ரேயன் சந்திப்பு.. மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா?

வினேஷ் போகத்தை எதிர்த்து WWE வீராங்கனை.. ஆம் ஆத்மி அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments