Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (14:10 IST)
தென்தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையால், தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திக்கும் சூழ்நிலை காணப்படுகிறது.
 
இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏப்ரல் 24 முதல் 28 வரை இந்த பகுதிகளில் இதேபோன்ற மழை தொடர வாய்ப்பு உள்ளது.
 
வெப்பநிலையைப் பொறுத்தவரை, இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் பெரிதான மாற்றம் காணப்படும் சாத்தியம் இல்லை. சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக சுமார் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
 
ஏப்ரல் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான நாட்களில் அதிக வெப்பமும், ஈரப்பதமும் காணப்படலாம். இது சில பகுதிகளில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
 
சென்னையில் வானம் பகலிலே மேகமூட்டத்துடன் காணப்படும். இங்கு அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை, குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானப்படை அதிகாரி போட்ட நாடகம்.. அம்பலப்படுத்திய சிசிடிவி! - IAF அதிகாரியை கைது செய்ய சொல்லி ட்ரெண்டிங்! என்னதான் நடந்துச்சு?

சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து.. பயணிகளுக்கு பாதிப்பா?

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

அடுத்த கட்டுரையில்
Show comments