Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (14:10 IST)
தென்தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையால், தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திக்கும் சூழ்நிலை காணப்படுகிறது.
 
இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏப்ரல் 24 முதல் 28 வரை இந்த பகுதிகளில் இதேபோன்ற மழை தொடர வாய்ப்பு உள்ளது.
 
வெப்பநிலையைப் பொறுத்தவரை, இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் பெரிதான மாற்றம் காணப்படும் சாத்தியம் இல்லை. சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக சுமார் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
 
ஏப்ரல் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான நாட்களில் அதிக வெப்பமும், ஈரப்பதமும் காணப்படலாம். இது சில பகுதிகளில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
 
சென்னையில் வானம் பகலிலே மேகமூட்டத்துடன் காணப்படும். இங்கு அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை, குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments