Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

Prasanth Karthick
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (09:11 IST)

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் வெளியே செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். சமீபமாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சி அளித்து வருகிறது.

 

அந்த வகையில் இன்றும் 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது சற்று அதிகமாகவோ நிலவும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments