இன்று இரவு தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
புதன், 12 மார்ச் 2025 (17:50 IST)
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று சென்னையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பல பகுதிகளில் மழை பெய்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில், இன்று 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று இரவு ஏழு மணிக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடையே மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
 
அதே போல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து, மேற்கண்ட 23 மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments